கடைசியாக கிடைத்த நிவாரணம்

ஊடகவியலாளர் கப்பனுக்கு எதிரான ஊபா வழக்கின் உறுதியற்ற தன்மையை உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருக்கிறது.

Published - September 12, 2022 12:01 pm IST

உத்திரபிரதேசத்தில் ஊடகவியலாளர் சித்திக் கப்பனின் நீண்ட சிறை வாசம், பொய் வழக்குகளை போடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஒரு நிர்வாகத்துக்குகூட எல்லை மீறிய தெளிவான தீங்கிழைக்கும் செயல்பாடுதான். பெரிய சிக்கல் இல்லாத நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி அவரது விடுதலைக்கு உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், முக்கியமான கேள்விகளை எழுப்பி அவரை சிறையில் இதற்கு மேலும் வைத்திருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு தட்டத்தின் (ஊபா) பிணை மறுக்கும் அம்சத்தை சரியாகவே மீறியிருக்கிறது. ஒரு தலித் சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இடமான ஹத்ரஸுக்கு அக்டோபர் 2020ல் பயணம் செய்துகொண்டிருந்த போது திரு.கப்பன் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் மக்களைப் பிளவுப்படுத்தும் ஒரு பிரச்சாரத்துக்காக அவர் சதி செய்தார் என்று சுமத்தப்பட்ட குற்றசாட்டு, கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவத்தைத் தொடர்ந்து எழுந்த பொது எதிர்ப்பிலிருந்து கவனத்தை திருப்புதற்கு என்பதைத் தவிர வேறு எப்படியும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சிகரமான ஒரு குற்றசாட்டு. அவர் கப்பன் நீண்ட காலம் சிறையில் இருப்பதை உறுதிசெய்ய, பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்காக நிதி சேகரிப்பது, அந்த செயலை செய்வதற்கான சதியில் ஏற்படுவது போன்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கூறுகளை கையிலெடுத்தது காவல்துறை. இது தவிர இரு சமூகங்களுக்கிடையில் பகையை வளர்ப்பது மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துவது போன்ற தண்டனைக்குரிய குற்றங்களையும் அவர் மீது சுமத்தியது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினராக அவர் சித்தரிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரும் துண்டு பிரசுரங்கள் மற்றும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்று அமெரிக்காவில் நடந்த போராட்டங்களுக்கான  நெறிமுறைகளை ஆங்கிலத்தில் கொண்டிருந்த அறிக்கைகள் போன்றவை அவரை குற்றத்தோடு தொடர்புபடுத்தும் ஆவணங்களாக முன் வைக்கப்பட்டன. வழக்கமாக பிணை மறுக்க மேற்கோள் காட்டப்படும் ஊபா பிரிவு 43டி (5) ஐ பயன்படுத்தாமல் விட்டது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யூ.யூ.லலித் தலைமையிலான அமர்வின் பாராட்டுதலுக்குரிய செயல்.

 ஒரு நபருக்கு எதிரான குற்றசாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் நம்புவதற்கு நியாயமான அடிப்படைகள் இருந்தால் பிணை வழங்குவதில் சட்டரீதியான தடையை அந்த பிரிவு விதிக்கிறது. பிணை வழங்கும் நிலையில் ஒரு வழக்கு இருக்கும்போது சாட்சிகளின் விரிவான ஆய்வை 2019ன் நீதிமன்ற உத்தரவு ஒன்று தடை செய்கிறது. ஆனால் வழக்கு தகவல்கள் குறித்த ஒரு பொது அறிவு அணுகுமுறை இருந்தால், பிணை குறித்த கேள்வியை இன்னும் கூடுதல் கவனத்தோடு அணுக முடியும். பாதிக்கப்பட்டவரின் நீதிக்காக குரல் எழுப்புவது எப்படி குற்றமாகும் என்று வாய்மொழியாக கேட்டதன் மூலம், மதரீதியான வன்முறையை தூண்ட நினைக்கும் ஒரு நபர் எதற்கு இன்னொரு நாட்டில் நடந்த போராட்டங்களுக்கான ஆங்கில துண்டு பிரசுரங்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டதன் மூலம், இந்த முழு வழக்கின் உறுதியற்ற அடிப்படைகளை அமர்வு நிரூபித்தது. தங்களுக்கு பிடிக்காத நபர்களை பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பயன்படுத்தி வெகுகாலம் எந்த அடிப்படையும் இல்லாமல் சிறையில் வைத்திருக்கலாம் என்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆணவமான எண்ணத்தை நீதிபதிகளின் தெளிவான அணுகுமுறை  இந்த பிணை உத்தரவு உடைத்திருக்கிறது. அதே நேரம் சித்திக் கப்பனுக்கு சுதந்திரம் வழங்க இந்த நீதிமன்றங்களுக்கு இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன என்பதே நீதியை மோசமாக பிரதிபலிக்கிறது. கடுமையான சட்டங்களின் மூலம் மக்களுக்கு தண்டனை தர காவல்துறையை நீதிமன்றங்கள் அனுமதிக்க கூடாது என்ற செய்தியை எல்லா மட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

This editorial has been translated from English, which can be read here. 

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.

  翻译: